19/03/2012

மருத்துவத்தின் அரசியல்

இந்த கட்டுரையை தொகுத்த - ஹீலர்.அ.உமர் பாரூக் ,M.Acu, D.Ed (Acu) . அவர்களுக்கு நன்றி.



மருத்துவ உலகின் எந்த ஒரு விஷயம் பற்றி விவாதித்தாலும் அதன் பின்னால் நிழலாய்த் தொடரும் வலைப்பின்னலில் இருந்து அவ்வளவு எளிதில் யாரும் தப்பிவிட முடியாது. வெளிப் படையாய்த் தெரியும் பல விஷயங்கள் அதன் ஆழத்தில் திட்டமிட்டு பின்னப்பட்ட அரசியலின் மேல் தான் நிறுவப்பட்டிருக்கின்றன.

நம்நாட்டு மருத்துவக்கல்வியின் கட்டமைப்பு பற்றி நாம் தொடங்குவது பொருத்தமானதாக இருக்கும். சமீபத்தில் ஊழல் வழக்கில் கைதான இந்திய மருத்துவக் கவுன்சிலின் இயக்குநர் பற்றி இன்று நாடே பேசிக்கொண்டிருக்கிறது என்றாலும் அத னையும் கடந்து நுட்பமான உள்முகங்களுக்குச் செல்லலாம். இந்திய மருத்துவக் கவுன்சில் (Indian Medical Council) என்ற பெயரில் இருந்தே அரசியல் துவங்குகிறது.

இந்தியாவின் ஹோமியோபதி மருத்துவக் கல்வியை முறைப்படுத்த Indian Homeo Medical Council, சித்தமருத்துவ, ஆயுர்வேதக் கல்வியை முறைப்படுத்த Indian Siddha and Ayurvedha Medical Council. இப்படி அந்தந்த மருத்துவமுறைகளின் பெயர்களிலேயே மாற்று மருத்துவக் கவுன்சில்கள் இயங்குகின்றன. எனில் ஆங்கில மருத்துவக் கவுன்சில் Indian Allopathic என்றுதான் இருந்திருக்க வேண்டும். ஆனால் Indian Medical Council என்ற தன் பெயரிலேயே இந்தியாவின் மருத்துவத் தலைமை நிறுவனமாகத் தோற்றமளிக்கிறது. இந்த ஆங்கில மருத்துவக் கவுன்சில் தன் துறையான ஆங்கில மருத்துவத்தில் மட்டும் தலையிடாமல், எல்லா மருத்துவத்துறைகளின் கல்வித் திட்டங்களிலும் அரசு ஒத்துழைப்போடு மூக்கை நுழைக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவக்கவுன்சில் பிறதுறைகளில் தன் ஆதிக்கத்தைச் செலுத்துவ தால் என்ன ஆகிவிடப் போகிறது என்று கூட நாம் கேட்கலாம். மாற்று மருத்துவக்கல்வியில் ஆங்கில மருத்துவம் கலந்ததால் இந்த 50 ஆண்டுகளில் மிக மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன; எதிர்காலத்தின் மாற்று மருத்துவ வளர்ச்சியே கேள்விக்குறியாகும் அளவிற்கு.

தமிழகத்தின் சித்த மருத்துவம் கல்லூரிகளில் துவங்கப்படுவதற்கு முன்பு ஆயிரக்கணக்கான மரபுவழி மருத்துவர்களால் பின்பற்றப்பட்டு வந்தது. சித்த மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்த குழு அமைக்கப்பட்டு பின் படிப்படியாக பாடத்திட்டம் தயாரானது. யார் சித்த மருத்துவத்தைப் பின்பற்று கிறார்களோ அவர்களால்தான் பாடத்திட்டம் தயாரிக் கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடந்ததோ வேறு. சித்த மருத்துவப்பாடங்களின் மேல் ஆங்கில மருத்துவர்களின் கருத்து பெறப்பட்டு ஒரு கலவை யான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது. மருத்துவ முறைகளின் உயர்வான வழிமுறைகள் கலப்பது மருத்துவ அறிவியலை முன்னேற்றத்தான் செய்ய வேண்டும் என்று நாம் பொதுவாகக் கருதலாம். ஆனால் ஒவ்வொரு மருத்துவத்தின் தனித்தனி யான நோய் பற்றிய புரிதலும், நோய்க்கான காரணங்களைக் கண்டறியும் வழிகளும் அடிப்படையிலேயே வேறுபடுகின்றன.

சித்த மருத்துவம் உடலில் ஏற்படும் தொந்தரவு களின் அடிப்படையில் மருந்துகளைப் பரிந்துரைப் பதில்லை. வாதம், பித்தம், கபம் என்ற கருத்துருக் களின் அடிப்படையிலேயே நோய்களை அணுகுகி றது. இந்த மூன்றில் ஒன்றிரண்டு கூடுவதாலோ அல்லது குறைவதாலோ உடலில் அறிகுறிகள் தோன்றுகின்றன என்று சித்த மருத்துவம் கூறுகிறது. ஒருவருக்கு வயிற்று வலி என்றவுடன் வலி மறைப்பு (Pain Killers) மருந்தை ஆங்கில மருத் துவம் பரிந்துரைப்பதுபோல் சித்த மருத்துவம் பரிந்துரைப்பதில்லை. இந்த நோயாளியின் உடல்நிலையை சித்த மருத்துவத்தின் தனித்துவ மான நாடிப்பரிசோதனை மூலம் மருத்துவர் கண்டறிவார். அந்த வயிற்று வலி வாத,பித்த, கபங்களில் எதன் குறை வால் அல்லது கூடுதலால் ஏற்பட்டது என்பதற்குத் தகுந்து மருந்துகளின் பயன்பாடு அமைந்திருக்கும். பாரம்பரிய அறிவியலான சித்த மருத்துவமுறையை ஆங்கில மருத்துவத்தின் ஆய்வுக்கூடங்களில் மதிப்பிட முடியாது. இந்த இரண்டு மருத்துவமுறைகளின் கலப்பு என்பது அறிவியல் வளர்ச்சிக்கானதாய் வெளிப்படையாய் தோன்றினாலும் உண்மையில் மருத்துவச்சிதைவையே தோற்றுவிக்கும். சித்த மருத்துவப் பாடத்திட்டத்தில் ஆங்கில மருத்துவ அடிப்படையிலான நோய்ப்பரி சோதனை முறைகளும், காரணிகளும் கலக்கப்பட்டன. விளைவு - இன்றைய பட்டம் பெற்ற சித்த மருத்துவர்கள் நாடிப்பரிசோதனை முறையை அறியாதவர்களாகத் தயாரிக்கப்படுகிறார்கள். எல்லாவிதமான நோய்களுக்கும் ஆங்கில மருத்துவ அடிப்படையில் சிந்தித்து சித்த மருத்துவ மருந்துகளைப் பயன்படுத்துபவர்களாக மாற்றப்படுகிறார்கள். இம்முறையை சித்த மருத்துவம் என்று அழைப்பதைவிட செத்த மருத்துவம் என்று அழைப்பதே சிறந்ததாக இருக்கமுடியும்.

ஒரு மருத்துவத்தின் உயிர்நாடியான பரிசோதனை முறை களையும், நோயியலையும் அழித்துவிட்டு வெறும் பெயரை மட்டும் பயன்படுத்துவது நியாயமாகாது. இதிலும் சித்த மருத்துவத்தை மிகச்சரியாக விளங்கிக்கொண்ட ஒரு சிலரே சித்த மருத்துவத்துறையில் நீடிக்கிறார்கள். பெரும் பாலோர் ஆங்கில மருத்துவத்தில் செய்முறைப் பயிற்சி பெற்று (அரசின் ஆசிர்வாதத்தோடு) சித்த மருத்துவத்தைக் கை கழுவுகிறார்கள். இப்படியான ஒரு கலப்படப் பாடத்திட்டத்தில் சித்த மருத்து வத்தைக் காப்பற்றவே முடியாதபோது, அதன் அடியாழங் களைக் கண்டுபிடிக்க கோடிக்கணக்கில் செலவழித்து ஆய்வு மையங்களை அரசு நிறுவிக்கொண்டிருக்கிறது. இதே நிலைதான் ஹோமியோபதிக்கும்.



ஹோமியோ மருத்துவத்தைக் கண்டுபிடித்த டாக்டர். ஹானிமென் உலகில் உள்ள எல்லா நோய்களுக்கும் ஹோமியோபதியில் தீர்வு உண்டு என்று கூறினார். ஹோமியோவிற்கென்று தனியான நோயறியும் முறை யும், நோய்க்காரணிகள் பற்றிய கொள்கையும் ஒருபுறம் இருக்க, ஆங்கில மருத்துவத்தின் அடிப்படைக் கொள்கை கள் - பாடத்திட்டங்கள் ஹோமியோவில் கலக்கப்பட்டன. இன்றைய பட்டம் பெற்ற ஹோமியோ மருத்துவர்களிடம் நாமே சென்று பேசி இந்த வேறுபாட்டை அறிந்துகொள்ள முடியும். ஹோமியோவிற்கு துளியும் சம்பந்தமில்லாத லேப் ரிப்போர்ட் டுகளையும், பரிசோதனை அறிக்கைகளையும் நம்பி பல நோய்களுக்கு ஹோமியோவில் தீர்வில்லை என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள் இன்றைய ஹோமியோபதியர்களில் பெரும்பகுதியினர். ஹோமியோ மருத்துவக் கல்லூரியில் படித்துவிட்டு, ஆங்கில மருத்துவத்தில் செய் முறைப் பயிற்சி எடுத்துக்கொள்ள அரசே வழிகாட்டுகிறது. இப்படி, சித்த மருத்துவத்தையும், ஹோமியோவையும் இன்ன பிற மாற்று மருத்துவங் களையும் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்க்க மறைமுகமாக அக்கல்லூரிகளே வழிகாட்டுகின்றன. அடிப்படைப் பாடத் திட்டத்தில் நேரெதிரான ஆங்கில மருத்துவக் கோட்பாடுகளைக் கலப்பதால் இன்றைய மாற்று மருத்துவங்களின் நிலை மோசமானதாக உள்ளது. மாற்று மருத்துவங்களுக்கான பாடத்திட்டத்தை சுயமாக தயாரிக்காமல், ஆங்கில மருத்துவக் கலப்போடு கொண்டு செல்லும் அரசு, ஏன் ஆங்கில மருத்துவப் பாடத்திட்டத்தில் பிற மருத்துவமுறைகளை அனுமதிப்ப தில்லை? ஒரு பாரம்பரிய மருத்துவமுறையை நேருக்குநேர் நின்று சந்திக்காமல் அதன் அடிப்படையை படிப்படியாகச் சிதைத்து ஒன்று மற்றதாக மாற்றி விடுவதுதான் இன்றைய மருத்துவ உலகின் பிரதான அரசியலாக இருக்கிறது.



மருத்துவத்தின் ஒவ்வொரு செயலையும் ஆழ்ந்து கவனித்தோமானால் அதன் அரசியலும், யாருக்காக இது கட்டமைக்கப்படுகிறது என்பதும் விளங்கத்தொடங்கும்.


சாப்பிட்டு விட்டு வேலை செய்தால் நன்றாக ஜீரணமாகும் என்பது ஒரு சாதாரணமான விஷயமாக மக்கள் மத்தியில் இன்று புழங்கிக் கொண்டி ருக்கிறது. பாரம்பரிய உடலியலின் அடிப்படையில் நாம் ஓய்வெடுக்கும் போது தான் ஜீரணம் நன்றாக வேலை செய்யும். சாப்பிட்டு விட்டு வேலை செய்தால் ஜீரணம் மெதுவாகத்தான் ஆகும். இந்த சாதாரணமான உண்மை கூட இன்று மாற்றப்பட்டிருக்கிறது. ஒரு மனிதன் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்காமல் தொடர்ந்து வேலை செய்தால் உடம்புக்கு நல்லது என்ற கருத்து யாரால் பரப்பப்பட்டிருக்கும்? ஒரு தொழிலாளி ஓய்வொழிச் சல் இல்லாமல் வேலை செய்தால் யார்யாருக்கு நல்லதோ அவர்களால் பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கும். 

இன்று பல பெரிய மில்களிலும், கம்பெனிகளிலும் தியான வகுப்புகளை நாம் பார்க்க முடிகிறது. கம்பெனிகள் தங்கள் செலவில் இப்பயிற்சி களுக்கு ஏற்பாடு செய்கின்றன. இந்த முதலாளிகளுக்கு தொழிலாளி களின் ஆன்மீகத்தில் என்ன ஒரு அக்கறை? இப்படியான தியானங்களின் பலன்களை கொஞ்சம் பாருங்களேன். சுறு சுறுப்பாக ஓய்வெடுக்காமல் வேலை செய்வதற்கான உடல் திறனையும், மனத்திறனையும் இந்தப் பயிற்சிகள் அளிக்கும் என்ற கருத்தின் அடிப்படையில் இவைகள் முக்கி யத்துவம் பெற்றுள்ளன. இவையும் கூட தொழிலாளிகளின் வேலை நேரத்தில் அளிக்கப்படுவதில்லை; அவரவரின் சொந்த ஓய்வு நேரத்தில் தான் இப்பயிற்சிகளுக்கான நேரமும் அடங்கியுள்ளது. 

நம் அன்றாட வாழ்வின் எல்லா கூறுகளிலும் மருத்துவத்தின் அரசியல் வலை விரிகிறது. இன்றைய காலத்தில் இது மையம் கொள்கிற இடமாக இருப்பது மருந்துகளின் பயன்பாடு. அதிலும் தடுப்பு மருந்துகள். இந்த தடுப்பு மருந்துகள் உலகம் முழுக்க ஏற்றுக் கொள்ளப்பட்ட அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவைகளாக நம்பவைக்கப்படுகின்றன. நூற்றுக் கும் மேற்பட்ட நாடுகளில் தடுப்பு மருந்துகளுக்கான எதிர்ப்பு கிளம்பி யிருக்கும் செய்தி இங்கே முற்றாக மறைக்கப்படுகிறது. தடுப்பு மருந்துகள் பற்றிய நூற்றாண்டு காலப்பொய் (புதுவிசை-இதழ் 27) கட்டுரை அவற்றில் சில செய்திகளைப் பகிர்ந்து கொண்டது. இன்னும் சில விஷயங்களை நாம் விளங்கிக் கொள்வது மருத்துவத்தின் அரசியல் எல்லை பற்றிய அபாயத்தை நமக்கு உணர்த்துவதாக அமையும்.

தடுப்பூசிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பும் பலநோய்கள் தானாக தோன்றி எவ்வித மருந்துகளுமின்றி தானாக குறைந்திருக்கிறது. இப்படி இயற்கையாகக் குறைந்த பலநோய்களை தங்கள் வரைபடத்தில் ஏற்றி வருமானமாக மாற்றியது தடுப்பூசி தயாரிக்கும் கம்பெனிகள். 1800 களி லிருந்து நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகளை முந்தைய கட்டுரையில் பார்த்தோம். 20 ஆம் நூற்றாண்டின் முதல் 60 ஆண்டுகளுக்குள் தட்டம்மை நோய் பாதிப்பால் ஏற்பட்ட மரணங்கள் 97.7% குறைந்து விட்டன. அமெரிக்காவில் 1900 இல் ஒரு மில்லியனில் 133 பேர் இறப்பு என்பது குழந்தை பொது மரண விகிதம். இவர்களில் 100 பேர் தட்டம்மை யால் இறந்தவர்கள். 1960 இல் மரண விகிதம் 0.3% ஆகக் குறைந்து விட்டது. ஆனால் 1963 இல் தான் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தட்டம்மை தடுப்பூசியால் மரண விகிதம் குறைந்துவிட்டதாக இப்போது கூறிக்கொள்கிறார்கள்.

இந்தத் தடுப்பூசிகள் நோயைக் கட்டுப்படுத்தாவிட்டால்கூட பரவா யில்லை; ஆனால் புதிய, கொடூரமான நோய்களையும் நம் குழந்தை களுக்கு பரிசாகத் தருகின்றன. 2004 ஆம் ஆண்டில் வெளியான டென்மார்க் நாட்டு அறிக்கையில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளில் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மட்டும் 4,40,000 பேர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் முழுக்க இவ்வாறு தடுப்பூசிகளால் பாதிக்கப்பட்ட பட்டியல் இன்றளவும் தொடர்கிறது. அமெரிக்காவில் 1983 இல் 10 தடுப்பூசிகள் மட்டுமே குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன. அப்போது மூளை வளர்ச்சிக்குறைவு உள்ள அமெரிக்கக் குழந்தைகள் பத்தாயிரத்தில் ஒருவர் தான். 2008 ஆம் ஆண்டு குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 36. இப்போது அமெரிக்கக் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குறைவு விகிதம் 150:1. 3000 மடங்கு அதிகரிப்பு ! ( அமெரிக்கத் தடுப்பூசித் திட்டங்களைப் பின் தொடர்ந்து தான் இந்தியா செல்கிறது என்பதை தனியே சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது).


DPT தடுப்பூசியோடு ஒரு எச்சரிக்கை அறிக்கையும் தரப்படுகிறது. (இந்த தடுப்பூசி மருந்தையே நம் டாக்டர் கண்ணில் காட்டமாட்டார். சிரிஞ்சில் ஏற்றப்பட்ட பிறகே நாம் அதைப் பார்க்க முடியும்.இந்த நிலையில் அறிக்கையாவது மண்ணாவது ). DPT தடுப்பூசி போட்டுக் கொள்வதால் சில பின்விளைவுகள் ஏற்படலாம் என்று குறிப்பிடும் இந்த எச்சரிக்கை அறிக்கையை கொஞ்சம் வாசியுங்களேன்.

1.அதிகப்படியான காய்ச்சல் ( 105 டிகிரி அல்லது அதற்கு மேல் )

2.மந்தமாக இருத்தல்

3.நீடித்த அசதி

4.விட்டு விட்டு ஏற்படும் அலறல்

5.மூளை வளர்ச்சிக் குறைபாடு

6.அதிகப்படியான துறுதுறுப்பு

7.எப்பொழுதாவது வலிப்பு

8.மூளை பாதிப்பு

9.மயக்கம்

10.கண் நரம்புக் கோளாறுகள்

11.நரம்பு சம்பந்தமான நிரந்தரக் கோளாறுகள் அல்லது மனநலக் குறைபாடு. . .


இப்படி ஒவ்வொரு தடுப்பூசி மருந்துடனும் வெவ்வேறு வகையான எச்சரிக்கைக் குறிப்புகளை இணைத்துத்தான் உலகம் எங்கும் விற்கப்படுகின்றன. தடுப்பூசியால் ஏற்படும் உச்சபட்ச விளைவாக குறிப்பிடப்படுவது எது தெரியுமா? SIDS தான். SIDS என்றால் Sudden Infant Death Syndrome அதாவது குழந்தை திடீரென இறந்துபோகும் என்பதைத்தான் இவ்வளவு அழகாகச் சொல்கிறார்கள்.

அமெரிக்கா, இங்கிலாந்து, டென்மார்க் என்று வெளிநாடுகளில் தானே இப்படி யான மரணங்கள் பதிவாகியுள்ளன. நாம் பயன்படுத்துவது வேறு மருந்தாக இருக்கும் என்று நினைத்துவிட வேண் டாம். இந்தியாவிலும் இத்தகைய பாதிப்பு கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின் றன. நம்முடைய பதிவேடுகளும், குறிப்பு களும் முறைப்படி எழுதப்படாமல் இருந் தாலும்கூட அரசும், மருத்துவத்துறையும் உணர்ந்துதான் இருக்கின்றன.


சில இந்தியக் குறிப்புகள்:

# சில வருடங்களுக்கு முன்னர் அஸ்ஸா மில் போலியோ சொட்டு மருந்து கொடுத்த பின் 10 குழந்தைகள் இறந்த தும், 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டதும் நிகழ்ந்தது.

# 2002 ஆம் ஆண்டில் உத்திரப்பிர தேசத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுத்த உடன் 26 குழந்தைகளுக்கு போலியோ ஏற்பட்டது. உலக சுகாதார நிறுவனத்திற்கு (WHO) இந்திய அரசு கடிதம் எழுதி அதன் தரம் பற்றிய பரி சோதனை கோரியது. இறுதியில் போலியோ சொட்டு மருந்தில் 17 வகை கலப்படங்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. பின்பு வழக்கம்போல் மறக்கப்பட்டது.

# தெஹல்கா , ஜூலை 28, 2007 இல் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தது. உத்திரப்பிரதேசத்தில் கொடுக்கப்பட்ட போலியோ மருந்து ஆய்விற்காக, பரிசோதனை முயற்சியாக கொடுக்கப்பட்டது. வழக்கமாக பயன்படுத்தும் சொட்டு மருந்தைவிட ஐந்துமடங்கு அதிக வீரியம் கொண்ட அந்த மருந்தை மக்களுடைய சம்மதம் பெறாமலே அவர்கள் மேல் பரிசோதிக்கப்பட்டது என்பதை அக்கட்டுரை தெளிவாக எடுத்துரைத்தது.

# இந்திய மருத்துவக் கழகத்தின் தடுப்பு மருந்துப் பிரிவின் தலைவர் டாக்டர்.ஜேக்கப் புலியேல் உத்திரப்பிரதேச சம்பவம் பற்றி திறந்த மனதோடு கட்டுரை எழுதினார். தி இந்து நாளிதழில் வெளியான அவரு டைய மற்றொரு கட்டுரையில் போலியோ சொட்டு மருந்தின் பிரச்சினை கள் குறித்து விரிவாக எழுதியிருந்தார். 2006 இல் மட்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து இந்தியாவில் 1600 பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், 27000 பேர் பாதிக்கப்பட சாத்தியம் உள்ளது என்றும் அக்கட்டுரை கூறுகிறது.

# உலக சுகாதார நிறுவனத்தின் நிலையே போலியோ விஷயத்தில் சந்தேகத்திற்கு உரியதுதான் என்கிறார் டாக்டர்.ஜேக்கப் புலியேல். இந்தியச் சூழலுக்கு போலியோ சொட்டு மருந்து சரிப்பட்டு வராது என்று கூறிய அதே WHO தீவிர போலியோ முகாமுக்கு பரிந்துரை செய்தது எதானால்? யாரால்? (The Hindu, Politics Of Polio 11/2008).

# இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதை தடை செய்ய வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் டாக்டர். சத்யமாலா தொடுத்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. (நன்றி:டாக்டர். புகழேந்தி )

தோண்டத் தோண்ட வெளிவரும் தடுப் பூசி பற்றிய உண்மைகள் இத்தோடு முடிந்துவிடவில்லை. இந்த தடுப்பூசி களின் இரகசிய வரலாற்றில் நம் குழந்தைகள் இடம்பெறாது போக வேண்டுமானால் விழிப்புணர்வு ஏற்பட்டே ஆகவேண்டும். 

டாக்டர்.வில்லியம் ட்ரெப்பிங் தன் நூலில் சில கேள்வி பதில்களைத் தந்துள்ளார். அவற்றை இங்கே வாசிப்பது பொருத்தமானதாக இருக்கும்.


உங்கள் மருத்துவருக்கு கற்றுத் தருவது எப்படி?

உங்களையும் என்னையும் போன்ற சராசரி மக்களுக்கு அடிப்படை விழிப்புணர்வு கிடைக்கப்பெற வேண்டும். உங்களுடைய குழந்தை நல சிறப்பு மருத்துவர்அவர் பயன்படுத்தும் தடுப்பூசி பற்றிய சந்தேகங் களுக்கு திருப்திகரமான பதில்களை உங்களுக்கு அளித்தே ஆக வேண்டும். இல்லையெனில் சரியாகபதிலளிக்கும் இன்னொரு மருத்து வரை நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய நேரம் வரும்.

உலகத்திலுள்ள எல்லா மருத்துவர்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியான கேள்விகளையே கேட்பார்கள். நீங்கள் மருத்துவருடன் உரையாட பின்வரும் கேள்விபதில்கள் உதவும்.

மருத்துவர் : தடுப்பூசி மருந்து முற்றிலும் பாதுகாப்பானது.

உங்கள் பதில்: நீங்கள் சொல்லும் தடுப்பூசிகளில் பாதரசம், அலுமினியம், பார்மால்டிஹைட் போன்றவைகள் உள்ளன. இவைகள் விஞ்ஞானரீதியில்நிரூபிக்கப்பட்ட நரம்பை பாதிக்கும் விஷங்கள். நீங்கள் எவ்வாறு இவ்வளவு உறுதியாக இந்த ரசாயன விஷங்களை பாதுகாப்பானது என்று கூறுகிறீர்கள்?

மருத்துவர்: தடுப்பூசியை எதிர்க்கும் மக்கள் போலியான ஆராய்ச்சிகளை நம்புகிறார்கள்.

உங்கள் பதில்: தடுப்பூசி பற்றிய எச்சரிக்கைகளை மக்களுக்கு வழங்கிய ஆய்வுகள் அனைத்தும் தரமான, தகுதியான மருத்துவர்களாலும், பலபல்கலைக்கழகங்களிலிருந்து வந்த அனைத்துத்துறை சார்ந்த நிபுணர்களாலும் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாய்வுகள் அமெரிக்காவில் மட்டுமல்ல பல்வேறுஉலகநாடுகளிலும் செய்யப்பட்டன. ஆராய்ச்சி யாளர்களில் பெரும்பாலோர் மருத்துவத்திலும், நுண்ணுயிரியலிலும் பட்டம் பெற்றவர்கள். தடுப்பூசிக்குச்சாதகமான ஆய்வுகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பாக மருந்துக் கம்பெனிகளால் செய்யப் பட்டவைகளாகும்.

மருத்துவர் : குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருப்பது ஆபத்தான, பொறுப்பற்ற பெற்றோரின் அணுகுமுறை.

உங்கள் பதில்: தடுப்பூசி போடாமல் இருக்கும் முடிவை எடுப்பதற்குத்தான் கூடுதலான பொறுப்புணர்வு தேவை. ஆழமான ஆய்வு நோக்கம் இருந்தால் தவிரஇம்முடிவை யாராலும் எடுக்க முடியாது. இன்றைய சூழலில் நிறையக் குழந்தைகள் மூளைக்கோளாறால் பாதிக்கப் பட்டிருக்கும் போது வெறும் மருத்துவஆலோசனையை மட்டும் நம்புவது போன்ற முட்டாள் தனம் வேறெதுவும் இல்லை.

மருத்துவர்: நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால் (அமெரிக்க) சட்டத்தை மீறுகிறீர்கள் என்று அர்த்தம். இதன் காரணமாக நீங்கள் கைது செய்யப்படலாம்அல்லது உங்கள் குழந்தையை உங்களிடமிருந்து பிரிக்கலாம்.

உங்கள் பதில்: நீங்கள் வழக்கறிஞர் அல்ல; தயவு செய்து சட்டத்தைப் பற்றி பிரசங்கம் செய்ய வேண்டாம். ஏனென்றால், எந்த ஒரு சட்டமும் தனிமனிதஉரிமைக்கு எதிராய் அமைய முடியாது.

மருத்துவர் : நீங்கள் தடுப்பூசி போடவில்லையென்றால் உங்கள் குழந்தைக்கு மிகப்பெரிய ஆபத்து உள்ளது. மிகத் தீவிரமான நோய் உங்கள் குழந்தையின்உயிரையே குடிக்கலாம்.

உங்கள் பதில்: தடுப்பூசிகள் உண்மையிலேயே நீங்கள் நம்புவதுபோல் வேலை செய்தால் தடுப்பூசி போட்ட பெரும்பாலான குழந்தைகளுக்கு நோய்கள்வந்திருக்கக்கூடாது. அதேபோல, தடுப்பூசி போடாதவர்கள் நீங்கள் கூறும் ஆபத்து எதுவுமின்றி ஆரோக்கியமாகவே வாழ்கிறார்கள்.

மருத்துவர்: தடுப்பூசி போலியோவை 1950களிலேயே தடுத்து விட்டது.அழித்துவிட்டது.

உங்கள் பதில் : நீங்கள் கூறுவது மிகவும் அதிகப்படியான கற்பனை. உண்மை என்னவென்றால் 1953 க்குப்பிறகு போலியோவின் தாக்கம் இயற்கையாகவேகுறைந்துவிட்டது. 1957 க்குப்பிறகுதான் போலியோ தடுப்பூசி பிரச்சாரம் செய்யப்பட்டது.தடுப்பூசி போடப்பட்ட பின் போலி யோவைப் போன்ற மூளை,தண்டுவட நோய்கள் பயங்கரமான அளவில் பெருகியுள்ளது. போலியோவைக் கண்டிபிடித்த ஜோன்ஸ் சால்க் தான் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தால் 1966 - 76வரை ஏற்பட்ட போலியோவில் 3ல் 2 பங்கு அதிகரித்தது என்று கூறியுள்ளார்.

மருத்துவர் : தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் சின்னம்மை, பெரியம்மை போன்ற நோய்கள் குறைந்துள்ளன. தடுப்பூசிகளால் பாதிக்கப்படும்குழந்தைகள் எண்ணிக்கையில் குறைவுதான். (அறிவியல் வளர்ச்சியில் இப்படியான பாதிப்புகளும் இருக்கத்தானே செய்யும்).

உங்கள் பதில் : உலகின் எந்த நாடானாலும் சரி; அரசாங்கம் அழிந்து விட்டதாகக் கூறும் அதே நோய்கள் இன்றும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.அப்படி பாதிக்கப்பட்டவர்களில் 95% குழந்தைகள் தடுப்பூசி போட்டவர்கள்  என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

மருத்துவர் : இக்கால மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் தடுப்பூசிகளும், நுண்ணியிர்க்கொல்லி மருந்துகளும் தான்.

உங்கள் பதில் : இயற்கையாகவே நீண்டநாட்கள் வாழ்பவர்களுடைய பலனை ஆங்கில மருத்துவம் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்கிறது. ஆனால் உண்மைவேறுவிதமாக உள்ளது. நுண்ணியிர்க்கொல்லி மருந்துகள் சில தற்காலிகத் தொந்தரவுகளை மறைய வைக்கலாம். ஆனால் இந்த மருந்துகளைப்பற்றியஆராய்ச்சிகள் அனைத்தும் அதிகப்படியான நோய்கள் உருவாக இவற்றையே காரணமாகக் கூறுகின்றன. நுண்ணியிர்க்கொல்லி மற்றும் தடுப்பூசிகள்இரண்டுமே விற்பனைக்காக மருந்துக் கம்பெனிகளால் பிரச்சாரம் செய்யப்படுபவை தான். இந்தக் கம்பெனிகள் தங்கள் லாபத்திற்காக ஆராய்ச்சிகளை நடத்திஅறிக்கைகளைத் தயார் செய்கின்றன. இந்த பித்தலாட்டம் இல்லாமல் அரசாங்க உதவியுடன் மருந்து விற்க முடியாது.

மருத்துவர்: புதிய பெரியம்மை தடுப்பூசி ஆங்கில மருத்துவத்தின் இன்னொரு மைல் கல்.

உங்கள் பதில்: இந்த புதிய ஊசியைப் பயன்படுத்தி செய்யப்படும் ஆராய்ச்சி துவக்கநிலையில் தான் உள்ளது. அந்த ஆராய்ச்சியையும் ஒரு தடுப்பூசி தயாரிக்கும்மருந்து கம்பெனிதான் செய்கிறது. பெரியம்மையால் தாக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் 95% பேர் பெரியம்மை தடுப்பூசி போட்டவர்கள்தான். தடுப்பூசி தவிரமாற்று மருத்துவ முறைகளில் சிகிச்சை பற்றி உங்கள் ஆராய்ச்சிகள் ஏன் பேச மறுக்கின்றன? பெரியம்மைக்கு ஹோமியோபதி முறையில் சிகிச்சைஎடுத்துக்கொண்டவர்கள் 36 மணி நேரத்தில் அதிலிருந்து விடுபடுகிறார்கள். 

"தடுப்பூசியால் உடல்நலம் ஏற்படும் என்று பிரச்சாரம் செய்வதைக் காட்டிலும்கொடூரம் வேறொன்றுமில்லை" - டாக்டர். ஹென்றி லிண்ட்லார்.

"தடுப்பூசிகளின் காரணத்தால் உலகின் ஒரு நாள் இரத்த ஆறு ஓடும். நாளைய டாக்டர்கள்அதிர்ச்சிக்குள்ளாகி எப்படி ஒரு நல்ல ஆராய்ச்சியும் இல்லாமல் எந்த ஒரு நன்மையும் இல்லாத விஷத்தை நம்முடைய பிஞ்சுக்குழந்தைகளின் உடலில் ஏற்றி 21 ஆம் நூற்றாண்டு வரை கொண்டு சென்றோம் என்று புலம்புவார்கள்" - டாக்டர். டெட் கோரன், தடுப்பூசி ஆராய்ச்சியாளர்.

குறிப்புகள் மொழியாக்க உதவி : மருத்துவர்.இரா.ஞானமூர்த்தி.